நினைவென்னும்
பசுமை நிறை
அழகுச் சோலையில்
அங்குமிங்குமாகப்
பறந்திடும்
இளந்தளிர் நிலவுகள்
அன்பெனும் குளத்தில்
அவர்களுடைய அன்பின்
சாட்சிகளாயிருந்தன.
சில நேரங்களில்
அவை மலைகளின்
மறைவில் மறைந்தும்
அன்பெனும்
ஊஞ்சலில் ஆடியும்
அகமகிழ்ந்து
திளைத்திருந்தன.
ஆனால் இப்போதோ
சரியான புரிதலின்றி
அந்த அழகு நிலவுகள்
மழை மேகங்களால்
மறைக்கப்பட்டு
இடியும் மின்னலுமாய்
இடித்து நொடித்து
துன்ப அலைகளில்
கரைந்து
விவாகரத்தில்
முடிந்துவிட்டன.
No comments:
Post a Comment