Sunday, April 1, 2012

கனவு பலிக்குமா கடவுளே

உழைத்தேன் உழைத்தேன்
உன்னதம் பெற வாழ்வில்
மறந்தேன் மறந்தேன்
காதல் என்ற ஒன்றை

காலம் கடந்து நினைத்தேன்
கோல அழகு குன்றினாலும்
கொண்ட மனையாளையே
காதல் செய்யலாம் என்று

காதல் காதல் காதல் போயின்
சாதல் சாதல் என்றேன்
போத்தல் ஏதாவது
போட்டாயா என்றாள்

கண்ணே மணியே
கற்கண்டே என்றேன்
பொன்னும் பொருளும்
வாங்கு முதலில் என்றாள்

தனித்திருக்கலாம் வா
தங்கமே என்றேன்
உன்னை மன்னித்தாலல்லவா
தொடுவதற்கு என்றாள்

நடந்ததை மறந்து உலக
நடப்புக்கு வா என்றேன்
கடந்து போன இளமை இனி
வருமா என்றாள்

மறுபிறவி இருந்து மறுபடி பிறந்து
மறக்காமல் காதல் கொள்ள வேண்டும்
வாழ்வு சிறக்க அந்தக்
கனவு பலிக்குமா கடவுளே 




 

No comments:

Post a Comment