வார்த்தை வலிகள்
கொடுத்திருப்பேன்
நேசித்ததில்
நிறைகுறைகள் கண்டும்
நெஞ்சத்து அன்பு
குறைக்கவில்லை நீ
உழைப்புக்கு நீ
ஒத்துழைப்பு நல்கியதில்
பாச மகவுகள்
படிப்படியாய்
வளர்ந்தனரே
நிறைகுறைகள்
வாழ்வில் நீங்கா
நின்ற போதும்
தோள் கொடுத்தாய்
கல்வி ஏணி ஏறி
கரை சேர்ந்தனர்
பிள்ளைகள்
நிலை உயர்வு பெற்ற
மகவுகளுக்கு
மணமும் முடித்து
மகிழ்ந்த வேளையில்
உன் மனக்குரங்கு
வன்மம் கொண்டதேன்
ஒத்துழையாமை
ஆயுதம் ஏந்தினாய்
அத்துணையும்
குற்றமென்றாய்
அடிமனது வலி
என்று அரற்றினாய்
உட்கார்ந்து பேசவும்
உடன் படாததேனோ
இருதலைக் கொள்ளி
எறும்பின் நிலை
யாரிடமும் எதுவும்
உரைக்க இயலாது
ஏற்ற வாழ்வு
அணை போட
ஓய்வு ஆய்வுக்குறியாகி
சாய்வுக்கு
தோளில்லா நிலை
வளமான வாழ்விருந்தும்
குளம்நிறை சேறாகி
தளமே ஆடுகிறது
வேதனைகளின் வேர்களைத்
தேடிப்பார்க்கிறேன்
அடியும் தெரியவில்லை
முடிவும் புரியவில்லை
போதனைகள் ஏட்டுச்
சுரைக்காய்களாய்ப்
போனதில்
சாதனைகள்
மழை நீர் மண்ணானதே
கண்ணீர்
வற்றவில்லையே.
கொடுத்திருப்பேன்
நேசித்ததில்
நிறைகுறைகள் கண்டும்
நெஞ்சத்து அன்பு
குறைக்கவில்லை நீ
உழைப்புக்கு நீ
ஒத்துழைப்பு நல்கியதில்
பாச மகவுகள்
படிப்படியாய்
வளர்ந்தனரே
நிறைகுறைகள்
வாழ்வில் நீங்கா
நின்ற போதும்
தோள் கொடுத்தாய்
கல்வி ஏணி ஏறி
கரை சேர்ந்தனர்
பிள்ளைகள்
நிலை உயர்வு பெற்ற
மகவுகளுக்கு
மணமும் முடித்து
மகிழ்ந்த வேளையில்
உன் மனக்குரங்கு
வன்மம் கொண்டதேன்
ஒத்துழையாமை
ஆயுதம் ஏந்தினாய்
அத்துணையும்
குற்றமென்றாய்
அடிமனது வலி
என்று அரற்றினாய்
உட்கார்ந்து பேசவும்
உடன் படாததேனோ
இருதலைக் கொள்ளி
எறும்பின் நிலை
யாரிடமும் எதுவும்
உரைக்க இயலாது
ஏற்ற வாழ்வு
அணை போட
ஓய்வு ஆய்வுக்குறியாகி
சாய்வுக்கு
தோளில்லா நிலை
வளமான வாழ்விருந்தும்
குளம்நிறை சேறாகி
தளமே ஆடுகிறது
வேதனைகளின் வேர்களைத்
தேடிப்பார்க்கிறேன்
அடியும் தெரியவில்லை
முடிவும் புரியவில்லை
போதனைகள் ஏட்டுச்
சுரைக்காய்களாய்ப்
போனதில்
சாதனைகள்
மழை நீர் மண்ணானதே
கண்ணீர்
வற்றவில்லையே.
No comments:
Post a Comment