புள்ளிமான் கூட்டம் ஒன்று
துள்ளி விளையாடிய அழகை
அள்ளிப் பருகிய காலம் அன்று
கவலைகளே மணல் மேடாகி
சவலையாகிப் போன மனதால்
திவலையாய் விழும் மழைகூட
மன ஊஞ்சலில் அமராமல்
கனவுகளும் கவலை மயமாகி
முனகிடும் வாழ்க்கை வாழும்
நிலைமாறி ஒளி வீசுமா
மலையேறி எதிர் கொண்டால்
விலையில்லா வாழ்வு மலரும்
உண்மையிது உறங்காதது
திண்மை வேண்டும் உள்ளமதில்
வெண்மதி ஒளிவீசும் வாழ்வில்
இயற்கை அழகு இனி மிளிரும்
செயற்கையில்லை செயல் திறனிது
பகற்கனவு இனி வாராதுகாண்.
துள்ளி விளையாடிய அழகை
அள்ளிப் பருகிய காலம் அன்று
கவலைகளே மணல் மேடாகி
சவலையாகிப் போன மனதால்
திவலையாய் விழும் மழைகூட
மன ஊஞ்சலில் அமராமல்
கனவுகளும் கவலை மயமாகி
முனகிடும் வாழ்க்கை வாழும்
நிலைமாறி ஒளி வீசுமா
மலையேறி எதிர் கொண்டால்
விலையில்லா வாழ்வு மலரும்
உண்மையிது உறங்காதது
திண்மை வேண்டும் உள்ளமதில்
வெண்மதி ஒளிவீசும் வாழ்வில்
இயற்கை அழகு இனி மிளிரும்
செயற்கையில்லை செயல் திறனிது
பகற்கனவு இனி வாராதுகாண்.
No comments:
Post a Comment