கலைந்துபோன
கனவுகளைக்
கல்லறையாக்கி
வாழ்கிறேன்
பொய்யென்ற
கண்ணீரிலே
நனைந்து
வாழ்கிறேன்
பொருளில்லா
விவாதங்களின்
கனவாக
வாழ்கிறேன்
வரமாட்டாய் நீ
எனத் தெரிந்தும்
நாட்களை
எண்ணியெண்ணி
குமைந்து
வாழ்கிறேன்
தனியாக
விட்டுச்சென்றவனே
உன் காலடியோசையின்
இருட்டிலும் தான்
வாழ்கிறேன் நான்.
No comments:
Post a Comment