வானமென்னும்
வீதியிலே
வண்ணத்தாரகையாய்
நீந்திட
ஆசை
நேரமென்னும்
காலச் சக்கரத்தை
நிறுத்தி
விளையாடிட
ஆசை
கணினி என்னும்
மாய மந்திரத்தை
மயக்கி
வென்றிடவே
ஆசை
காயமே இது
பொய்யென்ற
காலனின்
கடுமையை
அடக்கி ஆண்டிடவும்
ஆசை
நேயமே இல்லாத
அரக்கர்தம்
மனதை
கீறிப் பார்த்திட
வெறியான
ஆசை
பொய்ம்மையில்
மூழ்கி
தன்னலம் கருதும்
போக்கிரிகளை
மறுமையிலும்
தண்டிக்க
ஆசை
ஆசைகளை
ஆழக் குழிதோண்டி
புதைத்தால்தான்
அமைதி வரும்
என்னும்
எண்ணத்தைப்
போற்றவும்
ஆசை
இவ்வுலகில்
முடியாத
ஆசைகள்
அவ்வுலகிலாவது
நிறைவேறுமா
காத்திருக்கிறேன்
இறைவா.
No comments:
Post a Comment